Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ராசா சாய்பாபா மையத்திற்கு நிதி பெற்றுத் தருவேன்
தற்போதைய செய்திகள்

ராசா சாய்பாபா மையத்திற்கு நிதி பெற்றுத் தருவேன்

Share:

நெகிரி செம்பிலான், லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாவது தவணையாக டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் சியு சே யோங், இன்று சிரம்பான், ராசாவில் உள்ள சாய் பாபா மையத்திற்கு வருகை புரிந்தார். அந்த மையத்தின் நிர்வாகப் பொறுப்பாளர்களின் அழைப்பை ஏற்று வருகை தந்த சியு சே யோங் கிற்கு மாலை மற்றும் பொன்னாடைப் போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. அதேவேளையில் தீபாரதனை நிகழ்விலும் சியு சே யோங் கலந்து கொண்டு சாய் பாபாவை வழிபட்டார்.

அந்த மையத்தின் நடவடிக்கைகள் குறித்து சியு சே யோங் கிற்கு மலேசிய இந்து சங்கத்தின் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் சிவ ஸ்ரீ டாக்டர் ஏ.எல். ஆனந்தகோபி சிவச்சாரியார் விளக்கம் அளித்தார்.

சாய் பாபா மையத்தின் சமூகவியல் நடவடிக்கைகளுக்கான சேவைகளை நேரில் பார்த்த சியு சே யோங், மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தமது வியப்பையும் வெளிப்படுத்தினார்.

குறிப்பாக, அந்த மையத்திற்கு வருகின்றவர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளில் இலவசமாக உணவு வழங்கும் சேவை, போற்றுதலுக்குரியதாகும் என்று சியு சே யோங் குறிப்பிட்டார்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசாங்கத்தை தற்காத்துக்கொள்ளும் அதேவேளையில் லோபாக் தொகுதியில் தம்மை வெற்றிப் பெறச் செய்வது மூலம் இந்த சாய் பாபா மையத்திற்கு தேவையான உதவிகளும், மாநில அரசின் மூலமாக கணிசமான நிதி உதவியையும் பெற்று தருவதாக சியு சே யோங் உறுதி அளித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!