Apr 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தெக்குன் திட்டத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: தொடங்கப்பட்ட 14 நாட்களிலேயே 143 இந்திய தொழில்முனைவர்களுக்கு 3.6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

Share:

கோலாலம்பூர், பிப்.8-

இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்தியர்களின் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட 14 நாட்களிலேயே இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த 143 தொழில் முனைவர்களுக்கு மொத்தம் 3.6 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அறிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தெக்குன் திட்டத்தில் இந்திய தொழில் முனைவர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களான SPUMI ( ஸ்பூமி ) மற்றும் SPUMI Goes Big ஆகியவற்றின் வாயிலாக மேற்கண்டவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

3.6 மில்லியன் தொகை, 143 இந்திய தொழில் முனைவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று SPUMI ( ஸ்பூமி ) மற்றும் SPUMI Goes Big திட்டத்தை மேற்பார்வையிடும் கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ ரமணன் இதனை தெரிவித்தார்.

Related News

சிகமாட்  கோர விபத்து: 3 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம்: டிரெய்லர் லாரி ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு

சிகமாட் கோர விபத்து: 3 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம்: டிரெய்லர் லாரி ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு

சிறுமி பாலியல் வன்கொடுமை: தலைமை சமையல்காரர் :குற்றத்தை ஒப்பினார்

சிறுமி பாலியல் வன்கொடுமை: தலைமை சமையல்காரர் :குற்றத்தை ஒப்பினார்

10A பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கிடைப்பதை உறுதி செய்வீர், ஜசெக. கோரிக்கை

10A பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கிடைப்பதை உறுதி செய்வீர், ஜசெக. கோரிக்கை

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எதிரொலி/ தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணையத்தை மீண்டும் அமைக்கும் முயற்சிகள் தீவிரம்

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எதிரொலி/ தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணையத்தை மீண்டும் அமைக்கும் முயற்சிகள் தீவிரம்

குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன

குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன

மோசடிக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் - ஆர் சஞ்சீவன் வலியுறுத்து

மோசடிக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் - ஆர் சஞ்சீவன் வலியுறுத்து