May 6, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பயணித்த போலீஸ்காரர் காருடன் கால்வாயில் விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பயணித்த போலீஸ்காரர் காருடன் கால்வாயில் விழுந்து மரணம்

Share:

சிப்பாங், நவம்பர்.29-

சாலையில் வெள்ளம் கரைபுரண்டோடிய ஓடிய நிலையில் நீரின் மத்தியில் காரில் பயணித்த போலீஸ்காரர் ஒருவர், காருடன் கால்வாயில் விழுந்து மரணமுற்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணியளவில் சிப்பாங்கில் Desa Giching கிளினிக் அருகில் நிகழ்ந்தது. கார் கால்வாயில் விழுந்த நிலையில் நீந்தி தப்பிக்க அந்த போலீஸ்காரர் முயற்சி செய்த வேளையில் அவர் நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக இரவு 11.30 மணியளவில் அவசர அழைப்புப் பெறப்பட்டது. அவசர அழைப்பைத் தொடர்ந்து கேஎல்ஐஏ தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் வரை கடந்து சம்பவ இடத்தை நள்ளிரவு 12.02 மணிக்கு வந்தடைந்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

நீரில் மூழ்கிய அந்த போலீஸ்காரர் நீலாய் மாவட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார் என்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்