Jun 29, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பயணித்த போலீஸ்காரர் காருடன் கால்வாயில் விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பயணித்த போலீஸ்காரர் காருடன் கால்வாயில் விழுந்து மரணம்

Share:

சிப்பாங், நவம்பர்.29-

சாலையில் வெள்ளம் கரைபுரண்டோடிய ஓடிய நிலையில் நீரின் மத்தியில் காரில் பயணித்த போலீஸ்காரர் ஒருவர், காருடன் கால்வாயில் விழுந்து மரணமுற்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணியளவில் சிப்பாங்கில் Desa Giching கிளினிக் அருகில் நிகழ்ந்தது. கார் கால்வாயில் விழுந்த நிலையில் நீந்தி தப்பிக்க அந்த போலீஸ்காரர் முயற்சி செய்த வேளையில் அவர் நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக இரவு 11.30 மணியளவில் அவசர அழைப்புப் பெறப்பட்டது. அவசர அழைப்பைத் தொடர்ந்து கேஎல்ஐஏ தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் வரை கடந்து சம்பவ இடத்தை நள்ளிரவு 12.02 மணிக்கு வந்தடைந்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

நீரில் மூழ்கிய அந்த போலீஸ்காரர் நீலாய் மாவட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார் என்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு