Dec 3, 2025
Thisaigal NewsYouTube
குவாந்தானில் கனமழை, புயல் காரணமாக 8 வீடுகள் சேதம்!
தற்போதைய செய்திகள்

குவாந்தானில் கனமழை, புயல் காரணமாக 8 வீடுகள் சேதம்!

Share:

குவாந்தான், அக்டோபர்.07-

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் பெய்த கனத்த மழை மற்றும் புயல் காற்று காரணமாக குவாந்தான் ரவூப்பில் 8 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கம்போங் மெலாயு செம்பாலிட், தாமான் அமாலினா லெஸ்தாரி மற்றும் ஜாலான் லிப்பிஸ் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 3 மணியளவில் வீசிய பலத்த புயல் காற்று காரணமாக வீட்டின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக ரவூப் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

என்றாலும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதே வேளையில், தாமான் பெருமாஹான் காலிங், கம்போங் காலிங் மற்றும் ஜாலான் ஸ்டேடியம் உள்ளிட்ட பகுதியில் கனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக குவாந்தான் ஓசிபிடி உதவி ஆணையர் அஷாரி அபு சாமா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி