Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அரசு நிர்வாகத்தை விரைவுபடுத்தும் முயற்சி: இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

Share:

கோலாலம்பூர், பிப்.3-

இலக்கவியல் மயமாக்கலுக்கு ஏற்ப அரசு நிர்வாகத்தை விரைவுபடுத்தும் முயற்சியில், அரசு ஊழியர்களை இந்தியாவுக்கு அனுப்பி ஆறு மாத கால செயற்கை நுண்ணறிவு AI பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அரசு தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ ஷம்சுல் பஸ்ரி அபு பகார் தெரிவித்தார். ஏற்கனவே முதல் குழு பயிற்சி முடித்து திரும்பியுள்ள நிலையில், இரண்டாவது குழுவும் அனுப்பப்பட்டுள்ளது. இஃது அரசு சேவைகளை இலக்கவியல் மயமாக்கும் தொடர்ச்சியான செயல்முறையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தனது உரையில், அரசு சேவைகள் அதிக திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இலக்கவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இலக்கவியல் உள்கட்டமைப்பு, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், இணையப் பாதுகாப்பை மேம்படுத்துதல் , அண்மைய – புதியத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

Related News

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்