Jan 23, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கம் அனைத்து மலேசியர்களையும் பாதுகாக்கும் தேசியத் தின செய்தியில் பிரதமர் அன்வார் உத்தரவாதம்
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை அரசாங்கம் அனைத்து மலேசியர்களையும் பாதுகாக்கும் தேசியத் தின செய்தியில் பிரதமர் அன்வார் உத்தரவாதம்

Share:

தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அனைத்து மலேசியர்களையும் பாதுகாக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

மலேசியர்களில் இன்னும் சிலர், நல்ல தரமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அனுபவத்திராத நிலையில், வானளாவிய கட்டிடங்கள் மற்றும் மாபெரும் நில அடையாளங்களால் மலேசியா பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஆடம்பர கட்டிடங்களாலும், பிரமாண்டமான கோபுரங்களினாலும் மலேசியாவும் மலேசியர்களும் பெருமைப்படுவதை விட பள்ளிகளின் கழிப்பறைகள் நல்ல வசதிகளுடன் இருக்க வேண்டும். அதுவே மலேசியர்களின் பெருமையாகவும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் அடித்தட்டு மக்கள் உட்பட அனைவரையும் பாதுகாக்கின்ற அரணாக ஒற்றுமை அரசாங்கம் விளங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 66 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு இன்று புத்ரா ஜெயாவில் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் பிரதபர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த ஆண்டு நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோ ஶ்ரீ அன்வார் பொறுப்பேற்றப் பின்னர் அவரின் தலைமையில் நாளை வியாழக்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்படவிருக்கிறது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு