Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கம் அனைத்து மலேசியர்களையும் பாதுகாக்கும் தேசியத் தின செய்தியில் பிரதமர் அன்வார் உத்தரவாதம்
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை அரசாங்கம் அனைத்து மலேசியர்களையும் பாதுகாக்கும் தேசியத் தின செய்தியில் பிரதமர் அன்வார் உத்தரவாதம்

Share:

தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அனைத்து மலேசியர்களையும் பாதுகாக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

மலேசியர்களில் இன்னும் சிலர், நல்ல தரமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அனுபவத்திராத நிலையில், வானளாவிய கட்டிடங்கள் மற்றும் மாபெரும் நில அடையாளங்களால் மலேசியா பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஆடம்பர கட்டிடங்களாலும், பிரமாண்டமான கோபுரங்களினாலும் மலேசியாவும் மலேசியர்களும் பெருமைப்படுவதை விட பள்ளிகளின் கழிப்பறைகள் நல்ல வசதிகளுடன் இருக்க வேண்டும். அதுவே மலேசியர்களின் பெருமையாகவும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் அடித்தட்டு மக்கள் உட்பட அனைவரையும் பாதுகாக்கின்ற அரணாக ஒற்றுமை அரசாங்கம் விளங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 66 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு இன்று புத்ரா ஜெயாவில் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் பிரதபர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த ஆண்டு நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோ ஶ்ரீ அன்வார் பொறுப்பேற்றப் பின்னர் அவரின் தலைமையில் நாளை வியாழக்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்படவிருக்கிறது.

Related News