Jan 21, 2026
Thisaigal NewsYouTube
நெதர்லாந்து நீதிமன்றத்தின் தீர்ப்பு, சூலு வாரிசுதாரர்களுக்கு பாதிப்பு
தற்போதைய செய்திகள்

நெதர்லாந்து நீதிமன்றத்தின் தீர்ப்பு, சூலு வாரிசுதாரர்களுக்கு பாதிப்பு

Share:

சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்ட கும்பல் ஒன்று மலேசியாவிற்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் அந்த கும்பலுக்கு மலேசியா 1,490 கோடி அமெரிக்க டாலர் அல்லது 6,259 கோடி வெள்ளியை இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பை நெதர்லாந்து, The Hague இல் உள்ள அப்பீல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருப்பது மூலம் சூலு வாரிசுதாரர்களின் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்ர் அசாலினா ஒத்மான் செயிட் தெரிவித்துள்ளார்.

சூலு சுல்தான் வாரிசுதாரர்களுக்கு மலேசியா, 6,259 கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று இவ்வாண்டு பிப்ரவரி மாதம் ஸ்பெயின் நடுவர் மன்றத் தலைவர் டாக்டர். கொன்சலோ சதம்பா வழங்கிய தீர்ப்பை நெதர்லாந்து, The Hague இல் உள்ள அப்பீல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருந்தார்.

நெதர்லாந்து அப்பீல் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மலேசியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மலேசிய இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளுக்கு இத்தீர்ப்பின் மூலம் ஒரு முடிவு கட்டப்பட்டுள்ளதாக அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்