கோலாலம்பூர், ஜூலை 15-
சட்டத்துறை தலைவர் அஹ்மத் டெரிருதீன் சாலே -வை மலாயா தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவிருப்பதாக வெளிவந்துள்ள ஆருடங்கள் குறித்து முன்னாள் சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது சட்டத்துறை தலைவராக தனது சீரிய பங்களிப்பை வழங்கி வரும் அஹ்மத் டெரிருதீன்- னின் ஆற்றல் குறித்து கேள்வி எழுப்புவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், சட்டத்துறை தலைவராக பொறுப்பு வகித்து வரும் ஒருவரை மலாயா தலைமை நீதிபதியாக மிக உயர் பதவிக்கு நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒரு வழக்கறிஞரமான ராம் கார்ப்பால் வினவினார்.
நீதிபரிபாலனத்தில் ஆற்றல் வாய்ந்த நீதிபதிகள் இருக்கும் பட்சத்தில் சட்டத்துறை தலைவர் மலாயா தலைமை நீதிபதியாக நியமிப்பது என்பது நடைமுறையில் இல்லாத வழக்கமாகும். நிலைமை இவ்வாறு இருக்க எதற்காக இப்படியொரு கலாச்சாரம் வலிந்து புகுத்தப்படுகிறது என்று ராம் கர்ப்பால் கேள்வி எழுப்பியுள்ளார்.








