May 22, 2026
Thisaigal NewsYouTube
வாகனத்தை மோதி மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
தற்போதைய செய்திகள்

வாகனத்தை மோதி மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

Share:

ஈப்போ, ஜூலை 8-

பேரக், சிம்பாங் புலை, ஜலான் லஹத் சாலையில், கட்டுப்பாட்டை இழந்து எதிர்தடத்தில் நுழைந்த மோட்டார்சைக்கிளோட்டியை, அவ்வழி வந்துக்கொண்டிருந்த வாகனம் ஒன்று மோதி தள்ளியதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று நிகழ்ந்த அச்சம்பவத்தில், 32 வயதுடைய அவ்வாடவர், நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்தார்.

அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக, ராஜா பெர்மைசூரி பைனுன்மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வேளை, வாகனத்தில் பயணித்த இருவர் காயங்களின்றி உயிர் தப்பியதாக,ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அஹ்மத் தெரிவித்தார்.

Related News