கோலாலம்பூர்,ஆகஸ்ட் 03-
தனிமையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை கட்டியணைத்து மானபங்கம் செய்ததாக நம்பப்படும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் கோலாலம்பூர், Setapak, Taman Melati, Jalan Melati-யில் நிகழ்ந்தது.
உள்ளூரைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனது வீட்டிற்கு செல்ல அவ்வழியே நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த அந்நிய நாட்டவர், ஆபாச சேட்டையைப் புரிந்துள்ளார் என்று Wangsa Maju மாவட்ட போலீஸ் தலைவர் ACP Mohamad lazim Ismail தெரிவித்தார்.
நான்கு நாள் தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ள அந்த அந்நிய நாட்டவர், குற்றவியல் சட்டம் 354 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








