Mar 15, 2026
Thisaigal NewsYouTube
மாது மானபங்கம்: முன்னாள் கைதிக்கு 5 மாதச் சிறைத் தண்டனை
தற்போதைய செய்திகள்

மாது மானபங்கம்: முன்னாள் கைதிக்கு 5 மாதச் சிறைத் தண்டனை

Share:

ஆயர் குரோ, டிசம்பர்.09-

மாது ஒருவரை மானபங்கம் புரிந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட முன்னாள் கைதி ஒருவருக்கு மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 5 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

46 வயது Jefri Joris என்ற அந்த நபர் சம்பந்தப்பட்ட வழக்கின் சாரம்சத்தை செவிமடுத்த மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கானி, அவரை உடனடியாகச் சிறைக்குக் கொண்டுச் செல்லும் வகையில் தண்டனை விதித்தார்.

கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி காலை 11.50 மணியளவில் மலாக்கா தெங்காவில் அந்த நபர், 31 வயது மாதுவிடம் பலவந்தமாக நடந்து கொண்டதுடன் அவரை மானபங்கம் செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் சம்பந்தப்பட்ட மாது உதவி நாடிய போது, அவர் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்