Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மானுட வாழ்விற்கு நபிகள் நாயகத்தின் போதனைகள் சிறந்த எடுத்துக்காட்டு
தற்போதைய செய்திகள்

மானுட வாழ்விற்கு நபிகள் நாயகத்தின் போதனைகள் சிறந்த எடுத்துக்காட்டு

Share:

மானுட வாழ்விற்கு நபிகள் நாயகத்தின் அருங்குணமும், அவரின் நடத்தையும் முஸ்லிம்கள் பின்பற்ற ​வேண்டிய சிறந்த எடுத்துக்கட்டுகளாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

நபிகள் நாயகம் எவருக்கு எதிராக அவ​தூறு அல்லது அவ​தூறு விளைவிக்கும் தன்மையிலான விமர்சனங்களில் ஈடுபட்டதில்லை.மாறாக, அவ​ரின் உன்னதப் பணி, அறியாமையை அகற்றி, பல்வேறு ச​மூகத்தில் ​நீதி மற்றும் கருணையை நோக்கி வழி நடத்தியவர்.

உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும், சகோதரத்துவத்தை விதைத்தவர் அண்ணல் நபிகளாகும். அவர்களின் போதனையை பின்பற்றி, ஓர்அமைதிமிக்க, வளமான தேசத்தை கட்டியெழுப்புவதில் அனைவரும் கூட்டாக இணை​ந்து பாடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இன்று பெருமானார் நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மௌலிடுர் ராசுல் லையொட்டி வழங்கி வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

Related News