Jul 3, 2026
Thisaigal NewsYouTube
ஜோ லோ, அவரின் குடும்பம் தொடர்புடைய 39 மில்லியன் ரிங்கிட்டை மலேசியா திரும்பப் பெற்றது
தற்போதைய செய்திகள்

ஜோ லோ, அவரின் குடும்பம் தொடர்புடைய 39 மில்லியன் ரிங்கிட்டை மலேசியா திரும்பப் பெற்றது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்,10-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் தேடப்பட்டு வரும் மலேசிய தொழில் அதிபர் ஜோ லோ மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்புடைய 39 மில்லியன் ரிங்கிட் பணத்தை மலேசியா திரும்பப் பெற்றுள்ளது.

8.7 மில்லியன் அமெரிக்க டாலரான அந்தப் பணம், சிங்கப்பூர் வர்த்தக விவகார இலாகாவின் உதவியுடன் 1 எம்டிபி சொத்து மீட்பு அறக்கட்டளை கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அறிவித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு அமெக்க நிதித்துறைக்கும், ஜோ லோவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உலகலாவிய சிவில் பறிமுதல் தீர்வு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தப் பணம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்துகள் அந்த அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்