தாப்பா, நவ.13-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 315.3 ஆவது கிலோமீட்டரில் தாப்பாவிற்கு அருகில் டிரெய்லர் லோரியில் மோதிய லோரி ஓட்டுநர் ஒருவர், இடிபாடுகளுக்கு இடையில் கால்கள் சிக்கி, வெளியேற முடியாமல் பரிதவித்த நிலையில், அவரை தீயணைப்பு, மீட்புப்பபடையினர் கடுமையாக போராடி மீட்டனர்.
இன்று காலை 8.23 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்து தொடர்பில் அவசர அழைப்பைப்பெற்ற தீயணைப்பு,மீட்புப்படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தி, 30 வயது மதிக்கத்தக்க அந்த லோரி ஓட்டுநரை மீட்டததாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புபபடை உதவி இயக்குநர் சபாரோட்ஷி நோர் தெரிவித்தார்.
முன்னதாக இரண்டு கால்களும் முறிந்த நிலையில் வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த லோரி ஓட்டுநர் பெரும் அவதிக்குள்ளானதாக அவர் குறிப்பிட்டார்.








