May 24, 2026
Thisaigal NewsYouTube
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போதைய செய்திகள்

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Share:

பகாங்,ஆகஸ்ட் 04-

விபத்துகளுக்குக் காரணமாக இருக்கும் ஓட்டுநர்கள், நிறுவன உரிமையாளர்கள், அதிலும் குறிப்பாக போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தைச் செலுத்தும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை விதிக்கப்படுவதைப் போக்குவரத்து அமைச்சு உறுதி செய்யும் என்று அதன் அமைச்சர் Anthony Loke உத்தரவாதம் அளித்துள்ளார்.

அத்தகைய நடவடிக்கை பொறுப்பற்ற ஓட்டுநர்களுக்கும் நிறுவன உரிமையாளர்களுக்கும் சிறந்த பாடமாக அமையும் என்றும் அவர் கூறினார்.

அதோடு, ஓட்டுநர்களுக்கு மட்டுமல்ல, நிறுவன உரிமையாளர்களுக்கும் தங்கள் ஓட்டுநர்கள் போதைப்பொருளின் தாக்கத்திலிருந்து விடுபடுவதை உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது என்பதை Anthony Loke சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, பகாங், Kampung Ketapang Hilir அருகே Pekan-Rompin சாலையின் 5-வது கிலோமீட்டரில் உள்ள வீடொன்றை, போதைப்பொருள் உட்கொண்டு treler ஓட்டுநர் மோதி தள்ளியதில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் அந்த ஓட்டுநரின் நிறுவன உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related News