Apr 3, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய கினி நிருபர் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவார்
தற்போதைய செய்திகள்

மலேசிய கினி நிருபர் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவார்

Share:

கோலாலம்பூர், மார்ச்.12-

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் ஏஜெண்டான ஒரு பாகிஸ்தான் ஆடவரிடமிருந்து 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக மலேசிய கினி நிருபர் B. நந்தகுமார், வரும் வெள்ளிக்கிழமை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.

நந்தகுமார், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், இன்று மாலையில் அவரிடம் தெரிவித்துள்ளது.

தாம் ஒரு நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கப் போவதாக நந்தகுமார் தெரிவித்துள்ளார். அண்மைய காலமாக லஞ்ச ஊழலை அம்பலப்படுத்தி வரும் தன்னை மேலும் எழுதவிடாமல் தடுப்பதற்கு தனது வாயை மூடுவதற்காக இப்படியொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளதாக நத்தகுமார் குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்களைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வரும் ஏஜெண்டுகள் குறித்து தாம் தொடர்ந்து எழுதாமல் இருப்பதற்கு ஏஜெண்டு ஒருவரிடம் ஒரு லட்சம் ரிங்கிட் லஞ்சம் கேட்டு, கடைசியில் 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கூறி, நந்தகுமார் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஷா ஆலாமில் உள்ள ஒரு ஹோட்டலில் எஸ்பிஆர்எம்மால் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாள் தடுப்புக் காவலுக்குப் பிறகு அவர் பத்தாயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Related News