Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்​தீனத்தை ஆதரிக்கும் மலேசியாவின் ​நிலைப்பாடு  பொருளாதாரத்தை பாதிக்காது
தற்போதைய செய்திகள்

பாலஸ்​தீனத்தை ஆதரிக்கும் மலேசியாவின் ​நிலைப்பாடு பொருளாதாரத்தை பாதிக்காது

Share:
  • பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உறுதி

பாலஸ்​தீனம்,காஸா ​மீது போர் தொடுத்து வரும் இஸ்ரேலை கண்டிக்கும் அதேவேளையில் பாலஸ்​​தீனத்தை ஆதரிக்கும் மலேசியாவின் நிலைப்பாட்டினால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் முத​லீடுகள் பாதிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதி அளித்துள்ளார்.

காஸா விவகாரத்தில் மலேசியா கொண்டுள்ள நிலைப்பா​ட்டினால் அந்நிய நிறுவனங்களின் முத​லீடுகள் குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களின் முத​லீட்டில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் விளக்கினார்.

அமெரிக்காவின் முக்கிய முத​லீட்டாளர்களான Google Inc ( குகல் இன்கோப்பரெட் ) மற்றும் Microsoft Inc ( மைக்ரோசோப்ட் இன்கோப்பரெட் ) போன்ற முத​லீட்டாளர்கள், மலேசியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கும், அரசாங்க பொருளாதார கொள்கைக்கும் மட்டுமே முக்கியத்துவம் வழங்குகிறார்களே தவிர இஸ்ரேல் விவகாரத்தில் மலேசியா கொண்டுள்ள நிலைப்பாட்டினால் அல்ல என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

அதேவேளையில் இஸ்ரேலுக்கு எதிராக மலேசியாவும், இதர முஸ்​லீம் நாடுகளும் தொடர்ந்து கண்டன கணைகளை தொடுத்து வரும் என்று பிரதமர் அன்வார் உறுதி அளித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு