Feb 26, 2026
Thisaigal NewsYouTube
Boss ஹிந்தி திரைப்பட ஒளிபரப்பு விவகாரம்: ஆர்.டி.எம்-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்
தற்போதைய செய்திகள்

Boss ஹிந்தி திரைப்பட ஒளிபரப்பு விவகாரம்: ஆர்.டி.எம்-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.26-

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.டி.எம், தொலைக்காட்சியில் BOSS எனும் ஹிந்தித் திரைப்படத்தை ஒளிபரப்பியதில் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், மலேசிய அரசாங்கத்திற்குச் சாதகமாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்படத்தின் விநியோக உரிமையாளரான Supreme Broadcast International நிறுவனம் கோரிய இழப்பீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி Evrol Mariette Peters தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் , வாதியான Supreme Broadcast International நிறுவனம் தரப்பில் 30,000 அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதற்கான முறையான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டியது. மேலும், ஒரு திரைப்படத்தின் வரலாற்றுச் செலவை மட்டும் வைத்து இழப்பீடு கோருவது சட்டப்படி செல்லாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் அரசாங்கத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், வழக்குச் செலவாக 50,000 ரிங்கிட்டை அரசுக்கு வழங்குமாறு திரைப்பட விநியோக நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

ஆர்.டி.எம்-ன் செயல்பாடுகளுக்கு அரசாங்கத்தை நேரடியாகப் பொறுப்பேற்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், திரைப்பட விநியோக நிறுவனத்திற்கும் ஆர்.டி.எம்-க்கும் இடையே முறையான ஒப்பந்தங்களோ அல்லது தகவல் பரிமாற்றங்களோ முன்னதாக நடைபெறவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினர். இதன் மூலம் பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தத் திரைப்பட உரிமை தொடர்பான சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Related News

புக்கிட் காயு ஹித்தாம் எல்லைப் படை கமாண்டர் மீது துப்பாக்கிச் சூடு: 24 மணி நேரத்தில் சந்தேக நபர் கைது

புக்கிட் காயு ஹித்தாம் எல்லைப் படை கமாண்டர் மீது துப்பாக்கிச் சூடு: 24 மணி நேரத்தில் சந்தேக நபர் கைது

என் அன்பு மனைவி அஸிஸாவிற்கு 46-வது திருமண நாள் வாழ்த்துகள் - பிரதமர் அன்வார் இப்ராஹிம் நெகிழ்ச்சி

என் அன்பு மனைவி அஸிஸாவிற்கு 46-வது திருமண நாள் வாழ்த்துகள் - பிரதமர் அன்வார் இப்ராஹிம் நெகிழ்ச்சி

2025-ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் லாப ஈவு 6% முதல் 6.2% வரை அறிவிக்கப்படலாம்

2025-ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் லாப ஈவு 6% முதல் 6.2% வரை அறிவிக்கப்படலாம்

டோன்டோ கும்பலுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை – குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் எச்சரிக்கை

டோன்டோ கும்பலுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை – குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்ற நிலை: மலேசியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்ற நிலை: மலேசியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை

டிஜிட்டல் தொழில்துறைக்கு ஏற்ப பட்டதாரிகளின் திறனை மேம்படுத்த மனித வள அமைச்சு தீவிரம்: டத்தோஶ்ரீ ரமணன்

டிஜிட்டல் தொழில்துறைக்கு ஏற்ப பட்டதாரிகளின் திறனை மேம்படுத்த மனித வள அமைச்சு தீவிரம்: டத்தோஶ்ரீ ரமணன்