May 15, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல், தம்பதியர் உட்பட ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல், தம்பதியர் உட்பட ஐவர் கைது

Share:

கோம்பாக், அக்டோபர்.16-

கிள்ளான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒரு கோடியே 40 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள 225 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

இந்தக் கடத்தல் கும்பல், கிளந்தானிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு போதைப்பொருளைக் கடத்தி வருவதில் கடந்த ஓராண்டு காலமாக தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

எல்லைப் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் கெத்தாமின் வகையைச் சேர்ந்த போதைப்பொருளைக் கிள்ளான் பள்ளத்தாக்கில் விநியோகிப்பதில் முக்கிய நபர்களாக இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கடந்த இரண்டு நாட்களில் மேற்கொண்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் இந்த கும்பல் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் யாவும் பத்துகேவ்ஸில் உள்ள ஒரு தரைவீடு மற்றும் வங்சா மாஜுவில் உள்ள ஓர் ஆடம்பர வீடு ஆகியவற்றில் கைப்பற்றப்பட்டதாக இன்று கோம்பாக் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசேன் ஓமார் கான் இதனைத் தெரிவித்தார்.

Related News

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு