Feb 24, 2026
Thisaigal NewsYouTube
ரமலான் பஜாரில் அதிரடிச் சோதனை: 13 இந்தோனேசியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ரமலான் பஜாரில் அதிரடிச் சோதனை: 13 இந்தோனேசியர்கள் கைது

Share:

காஜாங், பிப்ரவரி.24-

பிரபல ரமலான் சந்தை ஒன்றில் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில், சட்டவிரோதமாகத் தங்கியிருந்த மற்றும் விதிமுறைகளை மீறிய 13 இந்தோனேசியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

சிலாங்கூர், பண்டார் பாரு பாங்கி, லாமான் நியாகா கொமுனிடி, செக்‌ஷன் 13 இல் நேற்று பிற்பகல் 3.55 மணியளவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் செயலாக்க துணை தலைமை இயக்குநர் டத்தோ லோக்மான் எஃப்பெண்டி ரம்லி தெரிவித்தார்.

சந்தையில் வெளிநாட்டினரின் ஆதிக்கம் மற்றும் சட்டவிரோத வணிகம் குறித்த பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது பிடிபட்டவர்கள் அனைவரும் முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் உடனடியாக கைது செய்யப்பட்டனர் என்று டத்தோ லோக்மான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் அடங்குவர். மலேசியப் பிரஜைகள் 693 பேர் உட்பட மொத்தம் 720 தனிநபர்களிடம் சோதனையிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

முறையான பயண ஆவணங்கள் இன்றி தங்கியிருந்தது மற்றும் தங்களுக்கு வழங்கப்பட்ட சமூக விசா விதிகளுக்குப் புறம்பாக வியாபாரத்தில் ஈடுபட்டது போன்ற காரணங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று டத்தோ லோக்மான் விளக்கினார்.

Related News

தம்பிக்கு கொலை மிரட்டல்: இளைஞர் மீது குற்றச்சாட்டு

தம்பிக்கு கொலை மிரட்டல்: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கிக் தொழில்துறை பங்குதாரர்களுடனான கலந்தாய்வு அமர்வுகளை அரசாங்கம் தீவிரப்படுத்துகிறது - அமைச்சர் ரமணன்

கிக் தொழில்துறை பங்குதாரர்களுடனான கலந்தாய்வு அமர்வுகளை அரசாங்கம் தீவிரப்படுத்துகிறது - அமைச்சர் ரமணன்

நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு எம்பிஎம் மூலம் மதிப்பீடு செய்யப்படும்

நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு எம்பிஎம் மூலம் மதிப்பீடு செய்யப்படும்

ஸாஹிட்  மீதான 47 குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சட்டத்துறை அலுவலகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சட்டத்துறை அலுவலகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

"குவாசா ஓராங் மூடா" கிராமப்புறங்களிலுள்ள இளைஞர்களுக்கானத் திட்டமாகத் தோற்றுவிக்கப்படும்

"குவாசா ஓராங் மூடா" கிராமப்புறங்களிலுள்ள இளைஞர்களுக்கானத் திட்டமாகத் தோற்றுவிக்கப்படும்

எல்ஆர்டி கிளானா ஜெயா ரயில் பாதிப்பு: நெரிசலான நேரத்தில் பயணிகள் அவதி

எல்ஆர்டி கிளானா ஜெயா ரயில் பாதிப்பு: நெரிசலான நேரத்தில் பயணிகள் அவதி