Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தன்னை தானே கழுத்தில் குத்தித் தற்கொலை செய்த மாது
தற்போதைய செய்திகள்

தன்னை தானே கழுத்தில் குத்தித் தற்கொலை செய்த மாது

Share:

குழந்தை பெற்று 36 நாட்களான மாது ஒருவர் தன்னை தானே கழுத்தில் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நான்கு குழந்தைகளுக்குத் தாயான அந்த 35 வயது மாது, தன்னுடைய கணவருடன் தொலைபேசியில் பேசப்போவதாக கூறிக் கொண்டு அறையில் நுழைந்துள்ளார். தன் கணவரிடன் பேசிய பிறகு அந்த மாது தன்னை தானே கழுத்துப்பகுதியில் கத்தியால் குத்திக் கொண்டுள்ளார் என அந்த மாதுவின் தாயார் போலீசாரிடம் தெரிவித்தார்.

நான்காவது குழந்தை பிறந்த பிறகு தனக்கு அடிகடி வயிற்று வலி ஏற்படுவதாகவும் அவர் அதற்கான சிகிச்சை பெற்றுக் கொண்டு வருவதாகவும் அவர் தாயார் மேலும் கூறினார். கெடாவில் வசிக்கும் தன் கணவரிடன் தொலைபேசியில் பேசிவிட்டு நீண்ட நேரம் அறையை விடு வெளியேறாததால் அவர் தம்பி கூரையின் வழி பார்க்கும் பொழுது அந்த மாது கத்தியால் குத்திக்கொண்டு வலியால் துடித்துக் கொண்டிருந்தார் என தாயார் கூறியதாக கிளந்தான் பசோக் வட்டார போலீஸ் தலைவர் சுபரிதென்டன் முஹமட் இஸ்மயில் ஜமாலுடீன் இவ்வாறு கூறினார். இந்தச் சம்பவம் குறித்து ஆழமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்