May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோாசனை வாரிய உறுப்பினருக்கு 40 லட்சம் ரிங்கிட் குத்தகையா?

Share:

ஜன.29-

கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசன வாரிய உறுப்பினர் ஒருவருக்கு 40 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள குத்தகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த புலன் விசாரணை செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தயாராக இருப்பதாக அதன் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இவ்விவகாரம் அதிக வெளிச்சத்திற்கு வரவில்லை. விசாரணை அறிக்கையும் திறக்கப்படவில்லை என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

மாநகர் மன்ற ஆலோசனை வாரியத்தில் உள்ளவர்களுக்கு எவ்வாறு குத்தகை வழங்கப்பட்டது என்பது குறித்து முழுமையாக ஆராயப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் Dr Maimunah Mohd Sharif தற்போது இவ்விவகாரம் மாநகர் மன்றதில் உள் அளவில் விசாரணை செய்யப்பட்டு வருவதை உறுதி செய்துள்ளார்.

பொது டெண்டர் விடப்படாமலேயே அந்த 40 லட்சம் ரிங்கிட் குத்தகை மாநகர் மன்ற ஆலோசனை வாரிய உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related News