விமர்சனங்களை எதிர்கொள்வதில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால், மதம், இனம், ஆட்சியாளர் தொடர்புடைய 3ஆர் விவகாரத்தை மக்கள் தொடக்கூடாது என்று துணை நிதி அமைச்சர் அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார். அரசியல் உரை நிகழ்த்தும் போது, ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சியினரும் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தை விமர்சிக்க விரும்பினால் அதன் கொள்கை குறித்து விமர்சனம் செய்வதில் தவறில்லை. அதேபோன்று பிரதமரையோ அல்லது தம்மையோ விமர்சிக்க முடியும். உண்மையான தகவல்களுடனும், தரவுகளுடனும் விவாதங்களை நடத்தலாம். சண்டையிலாம். ஆனால், அதில் எக்காரணத்தை கொண்டும் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் விவகாரத்தை இழுக்கக்கூடாது என்று அகமட் மஸ்லான் நினைவுறுத்தினார்.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


