விமர்சனங்களை எதிர்கொள்வதில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால், மதம், இனம், ஆட்சியாளர் தொடர்புடைய 3ஆர் விவகாரத்தை மக்கள் தொடக்கூடாது என்று துணை நிதி அமைச்சர் அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார். அரசியல் உரை நிகழ்த்தும் போது, ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சியினரும் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தை விமர்சிக்க விரும்பினால் அதன் கொள்கை குறித்து விமர்சனம் செய்வதில் தவறில்லை. அதேபோன்று பிரதமரையோ அல்லது தம்மையோ விமர்சிக்க முடியும். உண்மையான தகவல்களுடனும், தரவுகளுடனும் விவாதங்களை நடத்தலாம். சண்டையிலாம். ஆனால், அதில் எக்காரணத்தை கொண்டும் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் விவகாரத்தை இழுக்கக்கூடாது என்று அகமட் மஸ்லான் நினைவுறுத்தினார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


