Aug 2, 2026
Thisaigal NewsYouTube
டீசலைக் கடத்த முயன்ற கும்பல் முறியடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

டீசலைக் கடத்த முயன்ற கும்பல் முறியடிக்கப்பட்டது

Share:

பந்தாய் ரெமிஸ், பெருவாஸ்,தைபிங் ஆகிய பகுதிகளில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களில் இருந்து அரசாங்கத்தின் உதவித் தொகை பெற்ற டீசலை வாங்கி அதனை அயல்நாட்டுக்குக் கடத்தும் முயற்சியை உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் மஞ்சோங் கிளை முறியடித்துள்ளது.

2 இலட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான டீசலை இங்குள்ள கிடங்கில் பதுக்கி வைத்திருந்தது

2 வார கண்காணிப்புக்குப் பிறகு அந்தக் கிடங்கில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் இரு உள்நாட்டுத் தொழிலாளர்கள், டீசல் என நம்பப்படும் திரவத்தை சந்தை விலையைக் காட்டிலும் மிகக் குறைவான விலைக்கு விற்கும் முயற்சியில் இருந்ததாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் பேரா மாநில இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

டீசலைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட லாரி, கடத்தப்பட உள்ள 5 ஆயிரம் லிட்டருக்கும் மேலான டீசல், அதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் ஆகியவற்றை அமைச்சி அதிகாரிகள் கைப்பற்றினர்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு