ஜொகூர்,ஜூலை 10-
ஜொகூர், பத்து பஹத் -ட்டில் தந்தி சமூக ஊடகத்தின் வாயிலாக தெரியவந்த இலக்கவியல் நாணய முதலீட்டு திட்டத்தை நம்பி, 56 வயது முன்னாள் ஆசிரியை ஒருவர், 150 ஆயிரம் வெள்ளியை இழந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட திட்டத்தில் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையை நம்பி, ஏமாற்றுப்பேர்வழி புலனம் செயலி வழி வழங்கிய இணைய பக்கத்தின் LINK-ங்கில் அவர் அவரது சுயவிவரங்களை வழங்கியுள்ளார்.
கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரையில், சுமார் 34 பொருளக கணக்குகளுக்கு 156 ஆயிரத்து 850 வெள்ளியை செலுத்தியிருந்த அவர், தனக்கான லாப தொகையை மீட்டுக்கொள்ள முடியாமல் போன பின்னரே, தாம் ஏமாந்துள்ளதை உணர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.








