May 18, 2026
Thisaigal NewsYouTube
எம்ஏஎச்பி விவகாரம்: பிஏசி உறுப்பினர்களின் கருத்து தனிப்பட்டது - தலைவர் விளக்கம்!
தற்போதைய செய்திகள்

எம்ஏஎச்பி விவகாரம்: பிஏசி உறுப்பினர்களின் கருத்து தனிப்பட்டது - தலைவர் விளக்கம்!

Share:

கோலாலம்பூர், ஜூலை.11-

மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் - எம்ஏஎச்பி பங்குகள் விற்பனையும் தனியார்மயமாக்கல் குறித்தும் பொது கணக்குக் குழு பிஏஐயின் விசாரணைகள் தொடர்பாக அதன் இரண்டு உறுப்பினர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அவர்களின்
தனிப்பட்டவை என பிஏசி தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சூடின் தெரிவித்துள்ளார்.

2வது நிதி அமைச்சரான அமீர் ஹம்ஸா அஸிஸான் அனைத்துக் கேள்விகளுக்கும் திருப்திகரமாக பதிலளித்ததாக பிஏசியின் துணைத் தலைவர் தெரேசா கோக்கும் சிம் ஸீ ஸின்னும் கூறியிருந்தனர்.

இருப்பினும், சில கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படாததால், சில சாட்சிகள் மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்றும், குழு எந்தவொரு முடிவையும் இன்னும் எடுக்கவில்லை என்றும் மாஸ் எர்மியாத்தி வலியுறுத்தினார். விசாரணையின் விவரங்களை ஊடகங்களுக்குத் தெரிவிப்பது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News