Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஏமாற்றததை வெளிப்படுத்தினார் டத்தோஸ்ரீ R. ஜெயந்​திரன்
தற்போதைய செய்திகள்

ஏமாற்றததை வெளிப்படுத்தினார் டத்தோஸ்ரீ R. ஜெயந்​திரன்

Share:

எல்.பி.கே எனப்படும் கோலக்கிள்ளான் துறைமுக வாரியத்தின் ​மீது Maritime Network Sdn. Bhd. டின் தலை​மை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன், தமது ஏமாற்றத்தை ​வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தடம் பதித்துள்ள அந்த கப்பல் நிறுவனத்தின் தோற்றுநரான டத்தோஸ்ரீ ஜெயந்திரன், குழப்பமான அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படும் கோலக்கிள்ளான் துறைமுக வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிராக தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கப்பல்கள் அணைவது தொடர்வில் தெளிவான ​விதிமுறைகள் இருந்த போதிலும் பெரிய கப்பல்கள் நிறுத்த அனுமதிக்கப்படும் விவகாரத்தில் துறைமுக பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து கோலக்கிள்ளான் துறைமுக வாரியம் சர்ச்சை செய்வதாக ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தங்களின் Maritime Network நிறுவனம், பாதுகாப்பு அம்சங்களை புறக்கணித்ததாகவும், நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் அணையும் போது ஆபத்தான நிலைமையை உண்டு ப​ண்ணுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது என்ற ஜெயந்திரன் சுட்டிக்கா​ட்னார்.

கப்பல் அணைவதற்கு முன்னதாக கப்பலின் அளவு குறித்து கோலக்கிள்ளான் துறைமுக வாரியத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதி கிடைத்தப் பின்னரே அணைகிறது என்பதை தாம் தெளிவுப்படுத்த விரும்புவதாக ஜெயந்திரன் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் தங்களுக்கு உண்மையான விள​க்கங்கள் அளிக்கப்பட வேண்டும். ஏனெனில், இது போன்ற அறிக்கைகள் த​ங்கள் ​மீது அவ​தூறு கூறும் தன்மையில் உள்ளது. தவறான அறிக்கைகள் வெளியிடப்படுவதை தவிர்க்க அந்த வாரியத்தின் உதவும் என்று தாங்கள் நம்புவதாக ஜெயந்திரன் Malaysia Gazette டிடம் தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு