அரச மலேசிய போலீஸ் படையின் துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ அயோன் கான் மைடின் பிச்சை, நேற்று தமது பணியை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். காலை 8 மணியளவில் தமது துணைவியார் டத்தின்ஸ்ரீ ஸலினா முகமட் அரிப்பினுடன் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தை வந்தடைந்த அயோப் கானை, போலீஸ் படை செயலாளர் டத்தோ நூர்லியா முகமட் சடுடின் உட்பட முக்கிய அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் 31 ஆவது மாடியில் உள்ள அமைந்திருக்கும் தமது அலுவலகத்திற்கு புறப்பட்டு, புதிய பொறுப்பினை ஏற்றார்.
கெடா மாநிலத்தில் பெண்டாங்கில் ஒரு சிறிய கிராமத்தில் கோப்பிக் கடை நடத்தி வந்த மைடின் பிச்சையின் புதல்வரான அயோப் கான், போலீஸ் படையில் சேர்வதற்கு இடம் கிடைக்காத நிலையில், சிறிது காலம் காத்திருந்து, ஓர் அரிய வாய்ப்பாக ஒரு இடம் காலியானதால் அந்த இடத்தில் பணிக்கு அமர்ந்து, இன்று நாட்டின் துணை ஐஜிபியாக உயர்த்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


