கடந்த 26 ஆண்டுகளில், லஞ்ச ஊழல் மற்றும் பணக் கசிவுகளினால் 4.5 டிரில்லியன் வெள்ளி இழைப்பை நாடு சுமப்பதற்கு காரணமாக இருக்கும் நபர்களை கண்டறியும்படி, 4 ஏஜென்சிகளுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம், வருமான வரி வாரியம், பேங்க் நெகாரா மலேசியா மற்றும் அரச மலேசிய போலீஸ் படை ஆகிய ஏஜென்சிகள், இந்த விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். அரசியல், இனம் மற்றும் மத வேற்றுமையின்று அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று பிரதமர் அன்வார் கேட்டுக்கொண்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


