கடந்த 26 ஆண்டுகளில், லஞ்ச ஊழல் மற்றும் பணக் கசிவுகளினால் 4.5 டிரில்லியன் வெள்ளி இழைப்பை நாடு சுமப்பதற்கு காரணமாக இருக்கும் நபர்களை கண்டறியும்படி, 4 ஏஜென்சிகளுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம், வருமான வரி வாரியம், பேங்க் நெகாரா மலேசியா மற்றும் அரச மலேசிய போலீஸ் படை ஆகிய ஏஜென்சிகள், இந்த விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். அரசியல், இனம் மற்றும் மத வேற்றுமையின்று அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று பிரதமர் அன்வார் கேட்டுக்கொண்டார்.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


