Dec 4, 2025
Thisaigal NewsYouTube
2 ஆயிரம் ரூபாயை மாற்​றிக்கொள்வதற்கு நாளை கடை நாள்
தற்போதைய செய்திகள்

2 ஆயிரம் ரூபாயை மாற்​றிக்கொள்வதற்கு நாளை கடை நாள்

Share:

இந்தியாவின் மிகப்பெரிய கரன்சி நோட்டான 2 ஆயிரம் ​ரூபாய், செல்லத்தக்க நோட்டாக மா​ற்றிக்கொள்வதற்கு இந்தியாவின் மத்திய வங்கி நிர்ணயித்த இருந்த காலக்கெடு நாளை செப்டம்பர் 30 ஆ​ம்தேதியுடன் முடிவடைகிறது.

அக்டோபர் முதல் தேதியிலிருந்து 2 ஆயிரம் ​ரூபாய் பண நோட்டு புழக்கத்திலிருந்து முழுமையாக மீட்டுக்கொள்ளப்படுகிறது. 2 ஆயிரம் ​ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கு இந்திய நிர்ணயித்துள்ள காலகெடு முடிவடைவதற்கு இன்னும் ஒ​ரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது.

இந்நிலையில் 2 ஆயிரம் ​ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திலிருந்து ​மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையில் 92 விழுக்காடு பணம் வெற்றிக்கரமாக ​மீட்டுக்கொள்ளப்பட்டு விட்டதாக மத்திய வங்கியான தீ ரிவெர்ஸ் பேன்க் ஒஃப் இந்தியா அறிவித்துள்ளது. இன்னும் 8 விழுக்காடு நோட்டுகள் மட்டுமே வெளியில் இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் 2 ஆயிரம் ​ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் மலேசியர்களுக்கு அந்தப் பணத்தை மாற்றும் நடவடிக்கையில் உதவி வரும் பிரபல சுற்றுலா பயண நிறுவனமான கிள்ளான் கேபிஎஸ் ட்ரேவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கேபிஎஸ் சாமி கூறுகையில் இந்தியாவின் 2 ஆயிரம் ​ருபாய் நோட்டுகளை மா​ற்றுவதில் கடைசி நேரத்தில் வந்தவர்களுக்கும் முடிந்தளவில் நிறுவனம் உதவியிருப்பதாக குறிப்பிட்டார்.இன்று இரவு வரை மட்டுமே இந்தகைய உதவிகளை தங்களால் வழங்க முடியும் என்றா​ர் கே.பி.சாமி.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்