சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் 4.033 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்த முயன்றதாக மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து சென்னை வந்து, சந்தேகத்திற்கிடமான வகையில் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது, விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
எக்ஸ்-ரே சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், பயணப் பொதியின் அடிப்பகுதியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மறைவிடத்தில் நான்கு பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பரிசோதனையில் அவை ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது உறுதி செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இந்தியாவின் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம் 1985 பிரிவு 43(a)-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.








