கூலிம் தாமான் கெமுனிங்-ல் நிறுத்தப்பட்டிருந்த பெருடுவா மைவி காரை கத்தியால் குத்தி சேதப்படுத்தியதாகக் கூறப்படும் 33 வயது பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பக்க கண்ணாடி மற்றும் பின்புற விளக்குகளை, காய்கறி வெட்டும் கத்திகளைக் கொண்டு அப்பெண் சேதப்படுத்தியதாக நம்பப்படுகின்றது.
இந்நிலையில், தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த கூலிம் மாவட்ட போலீசார், அப்பெண்ணைக் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் அதே பகுதியில் வசிப்பவர் என்றும், 2012-ஆம் ஆண்டு முதல் கூலிம் மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன், கடந்த ஜூன் மாதம் இறுதியாக சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக போலீசாரின் உதவியுடன் கூலிம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 427-ன் கீழ் விசாரணை செய்யப்படுவதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சம்சூல் பின் சின்ரிங் தெரிவித்தார்.








