Apr 2, 2026
Thisaigal NewsYouTube
தேசிய பதிவு இலாகாவிற்கு எதிராக மாது வழக்கு
தற்போதைய செய்திகள்

தேசிய பதிவு இலாகாவிற்கு எதிராக மாது வழக்கு

Share:

கோலாலம்பூர், மார்ச்.17-

தனது இரு பிள்ளைகளின் மைகாட் அட்டையிலும் இஸ்லாம் சமயத்தவர் என்ற வார்த்தையை அகற்ற மறுப்பதாகக் கூறப்படும் தேசிய பதிவு இலாகாவிற்கு எதிராக இந்து மாது ஒருவர், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

தாம் ஒரு முஸ்லீம் அல்லர் என்பதை கடந்த 2017 ஆம் ஆம் ஆண்டு கோலாலம்பூர் ஷரியா உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக அவ்விரு குழந்தைகளும் பிறந்ததாக அந்த மாது குறிப்பிட்டுள்ளார்.

2009 மற்றும் 2012 இல் பிறந்த தனது இரு குழந்தைகளும் முஸ்லிம் என்று அவர்களின் மைகாட் அட்டையில் உள்ளது. ஆனால், தாம் முஸ்லிம் அல்ல என்று ஷரியா உயர் நீதிமன்றம் வழங்கிய சான்றிதழை, தேசிய பதிவு இலாகாவில் சமர்ப்பித்தும், அதனை ஏற்றுக் கொள்ள அவ்விலாகா மறுப்பதாக மூவாரில் பிறந்தவரான 47 வயதுடைய அந்த மாது தமது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

ஷரியா நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னரே இரண்டு ஆண்டுகள் கழித்து ஓர் இந்து நபரை தாம் மணந்து கொண்டதாகவும், தாய், தந்தை இருவருமே இந்துவாக இருக்கும் பட்சத்தில் இரு பிள்ளைகளின் முஸ்லிம் சமய அந்தஸ்தை மாற்றுவதற்கு JPN மறுப்பது ஏன் என்று அந்த மாது கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News