Dec 4, 2025
Thisaigal NewsYouTube
திறன்பேசிகள் வழி சமூக வளைத்தளங்களில் நேரத்தை செலவிடும் சிறுவர்கள் மிக இலகுவாக பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றார்கள்.
தற்போதைய செய்திகள்

திறன்பேசிகள் வழி சமூக வளைத்தளங்களில் நேரத்தை செலவிடும் சிறுவர்கள் மிக இலகுவாக பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றார்கள்.

Share:

திறன்பேசிகள் வழி சமூக வளைத்தளங்களில் அதிகமான நேரத்தை செலவிடும் சிறுவர்கள் மிக இலகுவாக பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றார்கள் என பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஐமான் அத்திரா சாபு கூறினார். 2021 ஆம் ஆண்டு யூனிசெவ் மலேசியா வழங்கியுள்ள அறிக்கையின் புள்ளிவிவரங்கள்படி, 12 வயது முதல் 17 வயது மலேசிய சிறுவர்கள் பயன்படுத்து இணையத்தின் பயன்பாட்டினால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மிரட்டுதல், ஆபாசப்படம் காட்டுதல், ஆபாச காணொலிகள் , ஆசைவார்த்தை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடச்செய்தல், கடத்தல் போன்ற குற்றங்களால் பாதுப்பிற்குள்ளாகுவதால் பெற்றோர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறினார்.

Related News