Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கணக்காய்வார் படுகொலை , இரண்டு ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கணக்காய்வார் படுகொலை , இரண்டு ஆடவர்கள் கைது

Share:

கோலாலம்பூர், கம்போங் செராஸ் பாரு , ஜாலான் குவாரி- யில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாணக்கோலத்தில் கிடந்த கணக்காய்வாளர் ஒருவரின் கொலை தொடர்பில் விசாரணைக்கு உதவ இரண்டு சந்தேகப் பேர்வழிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த கணக்காய்வாளரின் நண்பர்கள் என்று நம்பப்படும் அந்த இரு ஆடவர்களும் தலைநகரிலும், சிலாங்கூரிலும் நேற்று கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சாம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

25, 35 வயதுடைய அந்த இரண்டு சந்தேகப்பேர்வழிகளையும் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக சாம் ஹலிம் குறிப்பிட்டார்.

Related News