Apr 4, 2026
Thisaigal NewsYouTube
இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்
தற்போதைய செய்திகள்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

Share:

மலேசியக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான ‘இறைபக்தியில் கட்டடக்கலை: இந்திய வம்சாவளியினரின் கோவில்கள்’ எனும் சிறப்பு கண்காட்சியை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 27 நாட்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சி, தலைநகர் கோலாலம்பூரில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், "நவீன நகரமயமாக்கலில் வானளாவிய கட்டிடங்களுக்கு மத்தியிலும், இந்து கோவில்கள் தனது தனித்தன்மையை இழக்காமல் கலாச்சார நங்கூரமாகத் திகழ்கின்றன. இவை வெறும் நினைவுச்சின்னங்கள் அல்ல; நமது கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஒரு தொடர் உரையாடல்," என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இக்கண்காட்சியின் ஒரு சிறப்பம்சமாக, இந்திய வம்சாவளி ஓவியர்களுடன் மலாய் மற்றும் சீன இனத்தைச் சேர்ந்த கலைஞர்களும் இணைந்து கோவில் ஓவியங்களை வரைந்திருப்பது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது மலேசியாவின் பன்முகத்தன்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

"தொழில்நுட்பம் வேகமாக முன்னேறினாலும், நமது பண்பாட்டையும் அதனுடன் இணைத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது நமது பொறுப்பு," என வலியுறுத்திய அமைச்சர், இத்தகைய புனிதக் கட்டடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

Related News

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்