Mar 19, 2026
Thisaigal NewsYouTube
அபாயகரமான வெளிநாட்டுப் பயணிகளைக் கண்டறியும் புதிய APSS குடிநுழைவு முறை - டிசம்பரில் அறிமுகம்!
தற்போதைய செய்திகள்

அபாயகரமான வெளிநாட்டுப் பயணிகளைக் கண்டறியும் புதிய APSS குடிநுழைவு முறை - டிசம்பரில் அறிமுகம்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.27-

அபாயகரமான பின்னணியைக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் புதிய APSS குடிநுழைவு முறை வரும் டிசம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்று உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷாம்சூல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.

இந்த முறையின் மூலம், அது போன்ற வெளிநாட்டுப் பயணிகள் நாட்டிற்குள் வரும் முன்பே, அவர்களின் பின்னணி மற்றும் அபாய மதிப்பீட்டைக் கணிக்க முடியும் என்றும் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஷாம்சூல் அனுவார் குறிப்பிட்டுள்ளார் ​.

இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, நாட்டிற்குள் அச்சுறுத்தல் இல்லாத வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியா வழங்கும் நீண்ட கால விசாக்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இம்முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் ஷாம்சூல் அனுவார் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை