May 18, 2026
Thisaigal NewsYouTube
விஇபியில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வாகனங்களுக்கு இன்று முதல் சம்மன்
தற்போதைய செய்திகள்

விஇபியில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வாகனங்களுக்கு இன்று முதல் சம்மன்

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.01-

மலேசியாவிற்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு, விஇபி எனப்படும் வெளிநாட்டு மோட்டார் வாகன நுழைவு அனுமதி பெர்மிட் விதிமுறை, இன்று ஜுலை முதல் தேதி செவ்வாய்க்கிழமை முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.

தங்கள் வாகனங்களை, வாகன நுழைவு அனுமதித் திட்டமான விஇபியில் பதிவு செய்யாத அல்லது செயல்படுத்தாத வெளிநாட்டு வாகன உரிமையாளர்களுக்குச் சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே, சம்மன் வழங்கும் நடவடிக்கையை ஜோகூர் பாருவில் இன்று அதிகாலையில் தொடங்கியுள்ளது.

புதிய சட்டவிதி, இன்று முதல் அமலுக்கு வந்து இருப்பதால், இந்த விதியை மீறும் வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்குத் தலா 300 ரிங்கிட் அபராதத் தொகைக்குரிய சம்மனை ஜேபிஜே வெளியிட்டு வருகிறது.

விஇபியில் பதிவு செய்யாத சிங்கப்பூர் வாகனங்கள் மலேசியாவிற்குள் நுழையுமானால், அவற்றின் உரிமையாளர்கள் இந்த சம்மனைப் பெற்றுதான் ஆக வேண்டும் என்று சாலை போக்குவரத்து இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்துள்ளார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி