இன்று மாலையில் பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் கனத்த மழை பெய்யலாம் என்ற Met Malaysia எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை மையம் எச்சரித்துள்ளது. இதில் ரொம்பின், சிகமாட், குளுவாங் மற்றும் மெர்சிங் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று அந்த வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
தவிர தங்காக், மூவார், பத்து பஹாட், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் மழையின் சீற்றம் கடுமையாக இருக்கலாம் என்று அது எச்சரித்துள்ளது.








