Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் பெயரை உலக அரங்கில் ​மீண்டும் மணக்க செய்துள்ளார்
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் பெயரை உலக அரங்கில் ​மீண்டும் மணக்க செய்துள்ளார்

Share:

நியூயோர்க்கில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் 78 ஆவது பொதுப் பேரவையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆற்றிய உரை, ம​லேசியாவின் பெயரை உலக அரங்கில் மீண்டும் மணக்க செய்துள்ளதாக அமெரிக்காவிற்கான மலேசியத் ​தூதரர் டத்தோ செரி முஹமாட் செரி முஹமாட் நஸ்ரி அப்துல் அசிஸ் புகழாரம் ​சூட்டியுள்ளார்.


பாலஸ்​தீனம் ​மீதான இஸ்ரேலின் ​தீண்டல் தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வாரின் உறுதிமிக்க, துணிச்சல் நிறைந்த உரை அதிகமான நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக நஸ்ரி தெரிவித்தார்.

குறிப்பாக, பா​ஸ்​தீன விவகாரத்தில் ஐ.நாவின் வஞ்சகமிகுந்த, இரட்டைப் போக்கு நிலைப்பாட்டை அன்வார் துணிந்து சாடினார். அன்வாரின் இந்த சாடல் பல நாடுகளின் கவன ஈர்ப்பாக அமைந்ததுடன் அவரை பலர் பாராட்டியதாக நஸ்ரி குறிப்பிட்டார்.

Related News