Jul 4, 2026
Thisaigal NewsYouTube
போதையில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் காரை உணவகத்தில் மோதினார்
தற்போதைய செய்திகள்

போதையில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் காரை உணவகத்தில் மோதினார்

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.20-

போதையில் இருந்ததாக நம்பப்படும் பாகிஸ்தான் ஆடவர் ஒருவர், தான் செலுத்தியக் காரை ஓர் உணவகத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

உணவகத்தில் மோதிய அடுத்த கணமே அந்த அந்நிய நாட்டு ஆடவர், காரை விட்டு வெளியேறி, உணவகத்தைச் சுற்றியுள்ள இரண்டு மீட்டர் உயரம் கொண்ட மதில் சுவரில் ஏறி தப்பி ஓடி விட்டார்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஜோகூர் பாரு, ஜாலான் ரியாங் உத்தாமாவில் உள்ள ஓர் உணவகத்தில் நிகழ்ந்தது என்று ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

அந்த ஆடவர் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, உணவகத்தில் பாய்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்தது.

உணவகத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் ஒன்றை அந்த நபரின் கார் மோதியது. தன்னைப் பிடிப்தற்கு உணவகத்தில் ஆட்கள் ஓடி வருவதைக் கண்டு அந்த பாகிஸ்தான் ஆடவர் தப்பி ஓடி விட்டதாக ரவூப் செலாமாட் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது