Feb 18, 2026
Thisaigal NewsYouTube
முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து இன்னும் சீராக உள்ளது
தற்போதைய செய்திகள்

முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து இன்னும் சீராக உள்ளது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.18-

சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாளான இன்று, மதியத்திற்குப் பிறகு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. இருப்பினும், பிப்ரவரி 20 முதல் 22 வரை போக்குவரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஸ்மார்ட் வழித்தடங்களைப் பயன்படுத்தும் போது ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிளஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை மற்றும் கிழக்குக் கரை விரைவுச்சாலைகளான LPT1 மற்றும் LPT2 ஆகியவற்றில் போக்குவரத்து சீராக உள்ளது. இருப்பினும், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் மதியத்திற்கு மேல் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சில இடங்களின் நுழைவு வாயில்களில் வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளன. ஆனால் எங்கும் நீண்ட தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை என செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

Related News