May 18, 2026
Thisaigal NewsYouTube
தலைமை நீதிபதி பொறுப்பை இடைக்காலமாக மலாயா தலைமை நீதிபதி வகிப்பார்
தற்போதைய செய்திகள்

தலைமை நீதிபதி பொறுப்பை இடைக்காலமாக மலாயா தலைமை நீதிபதி வகிப்பார்

Share:

கோலாலம்பூர், ஜூலை.03-

நாட்டின் தலைமை நீதிபதி பதவிலிருந்து துன் தெங்கு மைமூன் துவான் மாட், பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இன்னும் புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படாத பட்சத்தில் அவர் வகித்து வந்த பொறுப்பை இடைக்காலமாக மலாயா தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா முகமட் ஹஷிம் ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ஆற்றி வந்த கடமைகளை, மலாயா தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா இடைக்காலமாகக் கவனித்துக் கொள்வார். 1964 ஆம் ஆண்டு நீதிமன்ற நீதிபதிகள் சட்டம் 9 மற்றும் கூட்டரசு அரசியலமைப்புச்சட்டம் 131 A பிரிவுக்கு நிகராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதிக்கான பொறுப்பை இடைக்காலமாக ஏற்பவர், அதற்கான அதிகாரம் மற்றும் பணித் தன்மையை இயல்பாகவே பெறுவதற்கு அந்தச் சட்டம் வகை செய்வதாக மலேசிய கூட்டரசு நீதிமன்ற தலைமை பதிவதிகாரி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி