எல்மினா விமான விபத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களில் மின்-ஹைலிங் வாகன மோட்டியின் குடும்பத்தினரை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த விமான விபத்தின் போது தரையில் இருந்த மின்-ஹைலிங் வாகன மோட்டியான 53 வயதுடைய ஷரிபுதீன் ஷாரி உயிரிழந்தார்.
தமன் தேச விஸ்டா, நியூ டவுன் சலாக் டிங்கி -யிலுள்ள அவரின் இல்லதிற்கு நேரில் சென்ற அந்தோணி லோக், குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களின் துயரத்திலும் பங்கேற்றார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


