எல்மினா விமான விபத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களில் மின்-ஹைலிங் வாகன மோட்டியின் குடும்பத்தினரை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த விமான விபத்தின் போது தரையில் இருந்த மின்-ஹைலிங் வாகன மோட்டியான 53 வயதுடைய ஷரிபுதீன் ஷாரி உயிரிழந்தார்.
தமன் தேச விஸ்டா, நியூ டவுன் சலாக் டிங்கி -யிலுள்ள அவரின் இல்லதிற்கு நேரில் சென்ற அந்தோணி லோக், குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களின் துயரத்திலும் பங்கேற்றார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


