Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஆட்டிசம் சிறுவன் ஸாயின் ராயன் மரணம்: தாயாருக்கு 5 ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

ஆட்டிசம் சிறுவன் ஸாயின் ராயன் மரணம்: தாயாருக்கு 5 ஆண்டுச் சிறை

Share:

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.31-

வளர்ச்சி குன்றிய ஆட்டிசம் சிறுவனான தனது 5 வயது மகன் ஸாயின் ராயன் அப்துல் மாதின் மரணம் தொடர்பில் அந்தச் சிறுவனை வேண்டுமென்றே புறக்கணித்த குற்றத்திற்காக அவனது தாயாருக்கு பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதின்றம் இன்று 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

30 வயது இஸ்மானிரா அப்துல் மானாஃப் என்ற அந்த மாது, இரண்டு ஆண்டு நன்னடத்தையில் இருக்க வேண்டும் என்பதுடன் 6 மாதக் காலக் கட்டத்தில் 120 மணி நேரம் சமூகச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நீதிபதி டாக்டர் ஷாலிஸா உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் இஸ்மனிராவும் அவரின் கணவர் 30 வயது ஸாயிம் இக்வான் ஸஹாரியும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இருப்பினும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் கடந்த ஜுலை 21 ஆம் தேதி இஸ்மனிராவின் கணவர் ஸாயிம் இக்வான் விடுதலை செய்யப்பட்டார்.

இன்றையத் தீர்ப்பில் சிறுவனின் தாயார் இஸ்மனிராவை உடனடியாக காஜாங் சிறைச்சாலைக்குக் கொண்டுச் செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆட்டிசன் சிறுவன் ஸாயின் ராயனின் மரணத்திற்குக் காரணங்கள் கண்டறிய முடியாத நிலையில் இறுதியில் அவனது தந்தையையும், தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஸாயின் ராயனின் உடல், பின்னர் பிளாக் R, பங்சாபுரி இடாமான் டாமான்சாரா டாமாய் நீரோடை அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஸாயின் ராயன் உடலில் காயங்கள் ஏற்படும் அளவிற்கு அவனை வேண்டுமென்றே புறக்கணித்ததாக தாயார் இஸ்மனிரா மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை