May 18, 2026
Thisaigal NewsYouTube
உள்ளூர்வாசிகளுக்குத் தொந்தரவாக இருந்தால், சிஎல்கியூ அனுமதி மீட்டுக் கொள்ளப்படும்
தற்போதைய செய்திகள்

உள்ளூர்வாசிகளுக்குத் தொந்தரவாக இருந்தால், சிஎல்கியூ அனுமதி மீட்டுக் கொள்ளப்படும்

Share:

புக்கிட் மெர்தாஜாம், ஜூன்.22-

அண்மையில், பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், சம்மிட் தங்கும் விடுதியில் ஏற்பட்ட கலவரத்தை மனிதவள அமைச்சு தீவிரமாகக் கருதுகிறது. அந்த தங்கும் 2027 வரை தொழிலாளர் தங்குமிடமாகச் செயல்பட செல்லுபடியாகும் உரிமத்தைக் கொண்டிருந்தாலும், உள்ளூர்வாசிகளுக்கு இடையூறு ஏற்பட்டால் அதன் உரிமத்தை இரத்து செய்ய ஊராட்சி மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை உறுதிச் செய்ய சிஎல்கியூக்கள் முக்கியம் என்றாலும், அமைதியையும் ஒழுங்கையும் பராமரிக்கும் பொறுப்பு அவற்றின் நிர்வாகத்திற்கு உண்டு. விதிமுறைகளை மீறினால், 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் அமைச்சு இந்த விவகாரத்தில் காவல்துறையுடன் இணைந்து முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என ஸ்டீவன் சிம் மேலும் கூறினார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை