ஜோகூர் பாரு, பிப்ரவரி.27-
ஜோகூர் மாநில வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவராக மூத்த வழக்கறிஞர் அனுஷா ராகவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்தச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
நேற்று நடைபெற்ற 2026-2027-ஆம் ஆண்டிற்கான தேர்தலில், அனுஷா ராகவன் 97 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட Norhayati Mohamed 85 வாக்குகளைப் பெற்றார்.
அனுஷா ராகவன், முன்னால் தலைவர் Fadhil Ihsan Mohamad Hassan- க்கு பிறகு இந்தப் பொறுப்பை ஏற்கிறார். இதற்கு முன்னதாக, 2020-2022 காலக் கட்டத்தில் Shahreen Begum என்பவர் ஜோகூர் வழக்கறிஞர்கள் மன்றத்தின் முதல் பெண் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.








