Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தங்கத்தேரின் பவனியைக் கண்காணிக்க மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் முறை

Share:

பிப்ரவரி, 02-

பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் டிஜிட்டல் பினாங்கும் இணைந்து, தைப்பூசத் திருவிழாவின்போது பக்தர்கள் தங்கத் தேரின் பவனியை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்படும் இந்த அமைப்பு , முந்தைய ஆண்டை விட மிகத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைத் திட்டமிட்டு, சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தி, முக்கியமான தருணங்களைத் தவறவிடாமல் இருக்க முடியும்.

இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்பு, பக்தர்கள் தங்கள் கைப்பேசிகள் மூலமாகவே தேரின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ள உதவுகிறது. இதனால், அவர்கள் தேரை வரவேற்கவும், வழிபடவும் சரியான நேரத்தை கணிக்க முடியும். குறிப்பாக, பவனி செல்லும் பாதையில் உள்ள பல்வேறு கோயில்களிலும், முக்கிய இடங்களிலும் பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளையும்,ளர்ச்சனைகளையும் சிறப்பாக மேற்கொள்ள இந்த அமைப்பு பெரிதும் உதவுகிறது என அவ்வாரியம் குறிப்பிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் தைப்பூசத் திருவிழாவில், இந்த டிஜிட்டல் கண்காணிப்பு முறை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட , ஆன்மீக நிலையிலான, நிறைவான அனுபவத்தை உறுதி செய்கிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பாரம்பரியத்துடன் இணைத்து, பக்தர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, புனிதப் பயணத்தின் தெய்வீகத் தருணங்களை யாரும் தவறவிடாமல் இருக்க இந்த முயற்சி உதவுகிறது என அவ்வாரியம் மேலும் குறிப்பிட்டது

https://pantau.digitalpenang.my எனும் இணையப்பக்கத்தின் வாயிலாக பொது மக்கள் தங்கத்தேரின் பவனி குறித்த விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்