Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளைக்கும்பலை போலீசார் வளைத்துப் பிடித்தனர்
தற்போதைய செய்திகள்

கொள்ளைக்கும்பலை போலீசார் வளைத்துப் பிடித்தனர்

Share:

அண்மையில் கிள்ளான் , தாமான் சி லியுங் வீடமைப்புப்பகுதியில் வீடு ஒன்றில் நுழைந்த வயதான கணவன் மனைவியை பாராங் முனையில் கொள்ளையிட்டதாக நம்பப்படும் ஆயுதமேந்திய கொள்ளைக்கும்பலை போலீசார் வளைத்துப் பிடித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி போலீசார் தகவல் பெற்றதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.

அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்த இக்கொள்ளைச் சம்பவத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 61 வயது தம்பதியரிடம் ரொக்கப்பணத்தையும் ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளர்.

இச்சம்பவம் தொடர்பில் அதிகாலை 4.15 மணியளவில் சிலாங்கூர் கடுங் குற்றத் தடுப்பு பிரிவான டி9 னைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று, கிள்ளான் ஜாலான் ஹாங் ஹுவாட் டில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய திடீர் சோதனையில் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் என்று நம்பப்படும் ஏழு பேரை கைது செய்துள்ளனர் என்று ஏசிபி சா ஹூங் ஃபாங் குறிப்பிட்டார்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

39 வயது மோகன் ராஜ் மூக்கையா என்ற சினி கண்ணா, 51 வயது ரவிச்சந்தின் ராமகிருஷ்ணன் என்ற பழத்தோட்டம் ரவி மற்றும் 44 வயது லெட்சுமணன் சங்கரன் என்ற லாச்சி ஆகிய மூவரை போலீசார் தேடி வருவதாக ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.

Related News

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து