Mar 13, 2026
Thisaigal NewsYouTube
போலி வெடிகுண்டு மிரட்டல் - இண்டர்போல், எஃப்.பி.ஐ. உதவியைக் காவல் துறை நாடும்
தற்போதைய செய்திகள்

போலி வெடிகுண்டு மிரட்டல் - இண்டர்போல், எஃப்.பி.ஐ. உதவியைக் காவல் துறை நாடும்

Share:

கூட்டரசு விசாரணை பிரிவான ஃப்பிஐ, அனைத்துலகக் காவல் துறையான இன்டர்போல் ஆகியவற்றுடன் இணைந்து பள்ளிக் கூடங்களில் விடுக்கப்பட்டிருக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவின் இயக்குநர் டத்தோ முஹமாட் ஷுஹைலி முஹமாட் சயின் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், அந்த மிரட்டலுக்கான நோக்கம் குறித்தும் அனுப்பியவர் யார் என்பதை அறியவும் Jamaica, Trinidad, Tobago ஆகிய நாடுகளின் உதவியோடும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

பெறப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களும் 'beeble.com' எனும் இணையப் பக்கத்தில் இருந்து வந்துள்ளதாகவும் அனுப்பியவர் பெயராக 'Taktstorer' எனக் குறிப்பிடப்பட்டதாகக் கூறும் முஹமாட் ஷுஹைலி அச்சொல் ஜெர்மானிய மொழி எனவும் அமைதியை நிலை குலைப்பவர் என்னப் பொருள் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

இதே போன்ற வெடிகுண்டு முரட்டல் ஜமாய்க்கா நாட்டில் சில பள்ளிகளுக்கு கடந்த நவம்பர் 12 ஆம் தேதி விடுக்கப்பட்டிருந்ததாக முஹமாட் ஷுஹைலி கூறினார்.

இவ்விவகாரம் குறித்து நாடு முழுவதும் 51 புகார்கள் பெற்றிருக்கும் நிலையில், 10 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!